இரட்டைவிரல் இளைஞனே!
உதடுகளின் நரம்புகளைநெருப்பால் சுட்டுக்கொண்டிருக்கும்
இரட்டைவிரல் இளைஞனே!
வாழத்துடிக்கும் முகங்களைப்பார்
வாழ்வைத் தொலைத்து உயிர்மட்டும் கொள்கின்ற
வெடித்துகள்களை சுவாசிக்கின்ற வயிற்றைப்பார்
முதல் புகையின் பொழுது வரும் இருமல்
உன் சாவின் ஓசை !வலிக்கும் மரணம்
நிச்சயம் உனக்குமட்டுமல்ல நண்பா!
உன் பக்கங்களைமட்டும் பற்றவைக்கவில்லை
ஒரு நூலகமே உன்னால் பற்றிக்கொள்ளப்போகிறது
சாபங்களைப் பெறுகிறாய் உன்னை நேசிப்பவர்களிடம்
கருவிலிருக்கும் குழந்தையும் உன்னை வெறுக்கும்
நிகழ்காலத்தில் நெருப்பை ஊதி ஊதி
உன் எதிர்கால குடிசையை எரித்துவிடாதே
இதன் கொடூரம் உன் எலும்புகளைஉருக்கி
உன் உள்ளங்கால் வரை செல்லும்
நீ நடக்கும் பாதைகளெல்லாம் கருகிப்போகும்!
இதோ கேட்கிறது ஒரு குரல்
உன் தாயின் குரல்தான்
மகனே! நான் என்ன செய்ய?
உன்னையும் காப்பாற்ற
தாலாட்டிலே சொல்ல மறந்த செய்தி
இன்று கண்ணீருடன் சொல்கிறேன்
நான் உனக்கு சுவாசம் தந்த தவறோ?
பலர் சுவாசத்தில் நிக்கோட்டின் கலக்கிறாய்
புகைமோட்டத்தில் திசை மாறிப் போகிறாய்இதோ சிலநெருப்புத் துண்டுகள் தருகிறேன்
புகையிலை செடிகளை வேரோடு கொழுத்திடு
இல்லை உன்னைப்பெற்ற பாவம்
என்னையே புகைசுட்டுக் கொன்றுவிடு!






