Mangaimano

a being in search of meaning—-}{

Archive for March 2nd, 2008

கண் மூடும் தேசம் இங்கே கண் திறக்கும் தேசம் அங்கே

Posted by mangaimano on March 2, 2008

1909394348_d718c58070.jpgஎங்கோ ஒரு தேசத்தில் சுனாமியால் மாண்டவர்களுக்காக இரக்கப்ப்டும் இவர்கள்,எங்கோ  குஜராத்தில்  பூகம்பத்தில்  புதைந்து போனவர்களுக்காக
இவர்கள் வருந்துகின்றனர்.ஆனால் எட்டிப்பார்த்த தலைமுறையில் வாழ்ந்த ஒரு சக மனிதனை ஒரு உயிரென்றுகூட நினையாமல் வெறுக்கின்றனர்.

ஈழக்கதையும்தான் இதுவே..காவேரி பிரச்சனையும் இதுவே,கஷ்மிர் தீவிரவாதமும் இதுவே…எங்கோ எதற்கு வீட்டுக்கு வெளியே எட்டிப்பாருஙள்  எதிர்வீட்டு கமலா அக்காவும் மாடிவீட்டு விமலா அக்கவும் போடும் தெருக்குழாய் தண்ணீர் சண்டையும் இதுவே
பள்ளிகளே,பெற்றோர்களே தயவு செய்து உங்கள் தேசப்பற்றை உங்கள் சந்ததியினருக்கு ஊற்றாதீர்கள்.அதனால் தானெ இவன் வீட்டுக்காரன்…என் தெருக்காரன்…என் ஊருக்காரன்….என் மாநிலத்துக்காரன்.என்சகோதரன்(ஒரே தாய் நாடாம்). என்று வெறியுடன் எரிகின்றனர் உங்கள் பிள்ளைகள்.
       ஒன்றை சிந்தியுங்கள் உலகை புரட்டிப்போட்ட  உலகப்போர்களும்   ,துண்டாக்கிக்கொண்டிருக்கும்  தீவிரவாதமும் உங்கள் தேசப்பற்றின் பிள்ளைகள் .
யாதும் ஊரே யாவரும் கேளிர்–

வாழப்பழகுங்கள்.
சக மனிதனிடம் மட்டுமல்ல சக உயிர்களையும் நேசியுங்கள்.ஏன்னென்றால் நீங்கள் என்றும் இவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் கடன் பட்டவர்களாவீர்கள்.

மண்ணை நேசிக்காதீர்கள் மனித மனங்களை நேசிக்கப்பழகுங்கள்
தவறினால்  மண் உங்களை அதற்கு உரமாக்கி மனித மனங்களை ரணமாக்கிவிடும்.உங்கள் சந்ததியயை விளலயாக்கிவிடும்.

நீங்கள் நல்லவர்தான் நிச்சயமாய்  இவர்களும் நல்லவர்கள்தான்.கண்ணைதறவுங்கள் இவரகளையும் வாழவிடுங்கள்

thanx:flickr.com

Posted in THAMIZH PAKKANGAL | Tagged: , , , , , , , , , , , , | 2 Comments »