2012 இல உலகம் அழிய போகிறது …உலகெல்லாம் இதே பேச்சு …….சிலருக்கு பயம்…ஒரு சிலர் இதை வைத்தே பிழைப்பை நடத்திகொண்டிருக்கின்றனர்…புது புது சாமிகள் நான் தான் கல்கி (குஷ்பு அல்ல) நான் கல்கி என்று கூறிகொள்கின்றனர்.ஏற்கனவே ௨௦௦௦ உலகம் அழியும் என்று சொன்னார்கள்…..எனக்கு தெரிந்து y2k பிரச்சனை தான் வந்தது!!உண்மையில் உலகம் எப்பொழுதும் போலவே மக்கள் தொகை பெருக்கம் அதை சமன் செய்ய இயற்கை சீற்றம்…அது போதாதென்று மனிதனின் றிவியல் கண்டுபிடிப்புகளனால் பேரழிவுகள் என்று நடந்துகொண்டிருக்கின்றன.
சரி நெருப்பில்லாமல் புகையாது !ஏனிந்த திடீர் பயம் !இந்த ஆண்டு அடுத்தடுத்து சூரிய சந்திர கிரகனங்கலாம் .வரலாறை திரும்பி பார்க்கும் பொழுது இதே போல் கிரகணங்களை சந்தித்த பொழுது உலக போர்கள் வந்தனவாம்.அதான் இப்பொழுது பயம்.
src:http://phys-merger.physik.unibas.ch/~aste/universeandman.jpg
இனி என்னதான் ஒவ்வொரு கோட்பாடுகளும் இயம்புகின்றன என்று பார்ப்போம்
மாயன் நாட்காட்டி டிசம்பெர் 21 2012 முடியப்போகின்றதாம்.
வருடங்களை மட்டும் வரையறுத்து வைத்து போயிருந்தா பரவாயில்லை நல்லா குறிகள்
கூறியும் சென்றிருக்கின்றனர்.இவர்களின் கணக்குப்படி 2012 ஆறாவது உலகத்தின் தொடக்கம்.ஐந்தாவது உலகம் 1987 இல் முடிவடைந்து விட்டதாம்.ஐந்தாவது உலகத்திலும் இப்பொழுதுள்ள இடைபட்ட காலங்களிலும் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சி கணக்கிடமுடியாது.மாயனின் கூற்றுப்படி 2012 இல் நாம் இந்த தொழில்நுட்பம் பணம் இதையெல்லாம் மீறி ஒரு ஞானத்தை அடைய போகின்றோம்.
உலகம் மற்றும் சூரிய குடும்பமே இந்த பிரபஞ்சதனுடன் ஒரு synchronize (ஒரே நேரத்தில் ஒருமித்தல்) ஆகப்போகிரதாம் நம் டி.என்.ஏ வேறுவிதமாக தரம் உயரப்போகிறதாம்.அதாவது பெருமாற்றம் அடையுமாம்.
இனி நம்ம ஊரு கதைக்கு வருவோம் ..இந்து மதம் போற்றுகின்ற கீதை என்ன சொல்கிறது
2012 இல் கலியுகத்தின் பொற்காலம் வருகிறதாம்…அப்போ அதற்கு முன்னர் 2009-2012 என்ன தான் நடக்க போகிறது நிச்சயமாக பேரழிவுகளை நம் உலகம் சந்திக்க வேண்டியிருக்கும்….சரி கல்கி சம்பல் கிராமத்தில் ஒரு விஷ்னுவ்யாச குடும்பத்தில் பிறப்பாராம்…உலகை ஆளும் கொடியவர்களை அழிப்பாராம்…
சரி அதுக்கப்பறம் பொற்காலத்தில் உலகம் வேறு ஒரு மாற்றத்திற்கு போகிவிடுமாம் காசு பணம் எல்லாம் மதிப்பற்று போய்விடுமாம்.மனிதம் ஒளிபெறுமாம்,இனவேறுபாடுகள் அழியுமாம்.
“உலக அரசர்களுக்கும் கல்கிக்கும் யுத்தம் நடக்கும்” என்பது இவர்களின் கூற்று
சூரியன் சந்திரன் குரு கடக பூசத்தில் இருக்கும் பொழுது க்ரிதா யுகம் தோன்றும்
அடுத்து நம்ம கிருஷ்தவ மதம்….விவிலியம் என்ன சொல்கிறது நெற்றியில் இறைவனின் பெயர் பொருந்தியவான் பிரக்கபோகிறான் அவன் வெள்ளை குதிரையில் வருவான் வெள்ளை குதிரை படைகளுடன்( Bible’s Book of Revelations (19.11-16, & 19-21) ) வருவான் என்று கூறுகிறது.
இஸ்லாம் என்ன சொல்கிறது உலக அழிவுகளையும் …அனைத்தையும் தீர்மானிப்பவர் இறைவன் ஒருவனே என்று கூறுகிறது
அறிவியல் இன்னும் 7.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கிறது என்று கூறுகிறது.
அதனால் கவலையை விடுங்கள்…மரணமே வந்தாலும் எதிர்த்து நிற்கும் மனித இனம் நாங்கள்
“make unconditional love conditional”
1)http://www.hinduism.co.za/kaliyuga.htm#The%20Evils%20of%20kaliyuga
2)http://www.stephen-knapp.com/kalki_the_next_avatar_of_God.htm
3)http://www.december212012.com/articles/bible/1.shtml
4)http://www.13moon.com/prophecy%20page.htm
5)survive2012.com
6)law of thermodynamics
7)http://2012armageddon.blogspot.com/






