அடுத்த நாள் படகு சவாரிக்கு ஆயத்தமானோம்….(JLR resorts)விடுதி மேலாளர் எங்களிடம் இங்கு உங்களுக்கு அதிர்ஷ்டமென்றால் சிறுத்தைகளை மற்றும் புலிகளை காணமுடியும் என்றார்.நான் அப்பாவியாய் பன்னர்கட்டா ஜூவில் நிறைய புலிகள் பார்த்திருக்கிறேன்,வெள்ளைப்புலிகள் கூட பார்த்திருக்கிறேன் என்று சொல்ல ,அவர் முகத்தில் கோபம் படர்ந்தது :D.ஆம் கூண்டில் அடைத்து ரோட்டி துண்டு போல் மாமிசம் கொடுத்து வளர்க்கப்படும் புலிகளுக்கும்,காட்டில் டெர்ரராய் விலங்குகளை வேட்டையாடி வாழும் புலிக்கும் வித்தியாசம் உண்டுதான் !
அந்த விடுதி முன்னொரு காலத்தில் வேட்டையாடுவதற்கு மைசூர் மகாராஜா தங்கியிருக்கும் இடமாம் . கபினி அணைக்கட்டின் ஆற்றேரக்குட்டை(backwaters) கரையில் விடுதி அமைந்திருந்தது .இந்த மூன்று மணி நேரப் பயணம் தரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி சூரிய உதயத்திற்கு முன் படகில் சில வெளிநாட்டு பயணிகளும் ஒரு கைடுமாக(guide) அமர்ந்தோம். அந்த கைடுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நினைவுதான்.இந்த காட்டுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் கண்ணில் படும் சொற்ப காட்சிகளும் நமக்கு தரும் ஆச்சிர்யத்திற்கும் பிரமிப்புக்கும் ஈடு இணையே இல்லை. national geography,animal planet,discovery channel பிரியர்கள் நிச்சயம் சபாரியை(safari) (இழக்கக் கூடாது.
குளிரில் நடுங்கும் காட்டிற்கு கதகதப்பு தருவதற்காக இயற்கை அன்னை சூரியனை மூட்டிவிட்டது போன்று,மெதுவாய் சூரியன் எழுந்து கொண்டிருந்தது .. அங்கு அந்த நீரில் இருந்த சில இறந்த மரங்களில் (dead woods)பறவைகளும் குளிர்காய வந்திருந்தன ………. நாங்களும் பக்கத்தில் தெரியும் கிராமத்தின் கொல்லைப்புறத்தையும் ,கபினி கரையோரத்தில் இருக்கும் மற்ற விடுதிகளையும் பார்த்து கொண்டே எழில் மிகுந்த மரங்களையும்,வரிவரியாய் அசைந்து செல்லும் நீரழைகளையும் ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம். Read the rest of this entry »
You must be logged in to post a comment.